மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதிய கோர விபத்தில் இரு இளைஞர்கள் பலி.

யாழ்ப்பாணம் துன்னாலை கோவிற்சந்தை பகுதியில் அதிகாலை1-30 மணியளவில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வளைவொன்றில் கட்டுப்பாட்டை இழந்து மின்பம்பத்துடன் மோதிய கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவத்தில் வடமராட்சி வதிரி பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த் நிசாந்தன் அகவை 28 மன்னாரை சேர்ந்த செல்லநாயகம் வின்சன் அகவை 34 இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

சடலம் யாழ் போதனா வைத்திய சாலையில் உடல் கூற்று சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.