அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

நுவரெலியா, அக்கரபத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தின் மேற்பகுதியிலுள்ள வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அந்த வனப் பகுதிக்குள் நேற்று (05) சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு மக்கள் தகவல் வழங்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

சடலம் அடையாளம் காண முடியாதவாறு அழுகியுள்ளது என்று பொலிஸார் தெரித்தனர்.

நீதிவானின் களப் பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.