பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கர விபத்து 16 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் டீசல் ஏற்றி வந்த கொள்கலனும் பயணிகள் பஸ்ஸும் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு இன்று(20) அதிகாலை 4 மணியளவில் 40 பயணிகளுடன் பஸ் சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது, பஸ் எதிரில் வந்த டீசல் கொள்கலன் மீது பயங்கரமாக மோதியதில் தீ பிடித்ததால் கொள்கலன் வெடித்து சிதறியது. இதனால், பஸ்ஸுக்குள் இருந்த பயணிகள் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், பஸ்ஸில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில், 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 4 பேரின் உடல்நிலை மோசமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களை அடையாளங்களை காணும் பணி நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.