கிளிநொச்சி மாவட்டத்தில் 106 சிறுமிகள் பலாத்கார மருத்துவப் பதிவுகள் இல்லை… பதிவுகள் இல்லாமையால் வழக்குகள் இல்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களில் (2020-2022) 106 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலான அறிக்கைகள் அந்தந்த மருத்துவமனைகளில் இருந்து காவல்துறை மற்றும் நீதிமன்றங்களுக்கு கிடைக்காத காரணத்தினால் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது தெரியவந்துள்ளதுடன், இவ்வாறு பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமிகள் மற்றும் குற்றவாளிகள் தொடர்பில் பொலிஸாராலும் நீதிமன்றத்தாலும் கோரிய அறிக்கைகள் கிடைக்காமை பெரும் பிரச்சினையாக உள்ளதாக பிரச்சினை எழுப்பியவர்கள் சுட்டிக்காட்டினர்.

வைத்தியர்களது இட மாற்றங்கள் மற்றும் போதுமான காரியாலய ஊழியர்கள் குறைவு ஆகியவை இப்படியான தாமதத்திற்கு காரணம் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.