13 தொடர்பில் மொட்டு இரட்டை நிலைப்பாடா? – காமினி லொக்குகே விளக்கம்.

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உடன்படாது. இந்த விடயத்தில் உறுதியான கொள்கையில்தான் எமது கட்சி உள்ளது.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“13 தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டில் நாம் இல்லை. ஒரேயொரு நிலைப்பாட்டில்தான் நாம் இருக்கின்றோம். அதாவது 13 ஐ வழங்குவதற்கு எமது கட்சி உடன்படாது. இந்த விடயத்தில் எமது கட்சியின் கொள்கை மாறாது.

இது சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தவும் தயாராகவுள்ளோம். யோசனைகளும் முன்வைக்கப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.