லொறி – ஹயஸ் மோதி கோர விபத்து! – இரண்டு இளைஞர்கள் சாவு

வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கோர விபத்து அநுராதபுரம் – கெக்கிராவை பிரதேசத்தில் இன்று (22) பகல் இடம்பெற்றுள்ளது.

பிரதான வீதியில் பயணித்த லொறியொன்றும் ஹயஸ் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஹயஸ் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 28 வயது இளைஞரும், வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த 24 வயது இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.

ஹயஸ் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலும், அவருடன் பயணித்த மற்றைய இளைஞர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.