ரணிலுக்கு ஆதரவு வழங்க நான் தயார் – வடிவேல் சுரேஷ் அதிரடி அறிவிப்பு.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறமையானவர். மலையகப் பெருந்தோட்ட மக்களுக்குக் காணி உரிமை வழங்குவதற்கு அவர் நடவடிக்கை எடுத்தால் ஒட்டுமொத்த மலையக மக்களுடன் அவருக்கு ஆதரவு வழங்கத் தயார்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

“எனக்கு கட்சி முக்கியமில்லை. எனது மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களே முக்கியம்.” – என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.