சூரியனை நோக்கி முன்னேறும் ஆதித்யா எல் 1 விண்கலம்..!

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை 3 ஆவது முறையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.

சூரியனை ஆய்வு செய்வதற்கு, கடந்த 2 ஆம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ‘ஆதித்யா எல்1’ விண்கலம் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரத்தை 3-வது முறையாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிகரித்துள்ளனர். அதன்படி, சூரியனில் இருந்து குறைந்தபட்சம் 296 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 71,767 கிலோ மீட்டர் தூரத்திலும் விண்கலம் சுற்றி வருகிறது. இதனை தொடர்ந்து கண்காணித்து வரும் விஞ்ஞானிகள், வரும் 15 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு 4 ஆவது முறையாக புவி சுற்று வட்டப்பாதை அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.