அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

டெல்லியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்றிரவு விருந்து அளித்தார். இதில், ஜி-20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், விருந்தினர் நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து கைகுலுக்கினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினை ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.