ஹரக்கட்டாவின் பாதுகாப்பு பலப்படுத்தல்! – 10 பேர் கொண்ட எஸ்.ரி.எப். குழு களத்தில்.

குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகப் புள்ளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஹரக்கட்டா, அதிரடிப் படையின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கைத்துப்பாக்கியை அபகரித்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தையடுத்து அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புக்காக விசேட அதிரடிப் படையின் 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10ஆம் திகதி மாலை விசேட அதிரடிப் படையின் உப பொலிஸ் பரிசோதகரிடமிருந்த கைத்துப்பாக்கியை ஹரக்கட்டா பறிக்க முற்பட்ட சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.