பகிடிவதை குறித்து முறையிட விசேட தொலைபேசி இலக்கம்.

இலங்கை பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:-

“பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும்.

076 54 53 454 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு வட்ஸ் அப் மூலம் தகவல்கள், முறைப்பாடுகள், காணொளிகள் அல்லது படங்களை அனுப்ப முடியும்.

மேலும் 1997 எனும் துரித அழைப்பு இலக்கத்துக்கும் இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.