யானை தாக்கி இருவர் பரிதாபச் சாவு!

இரு வேறு பிரதேசங்களில் காட்டு யானைகள் தாக்கி இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், மஹாஓயா, பொரபொல ¹பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 82 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்த முதியவர், யாக்கினிகல மலை பகுதிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, ஹதுன்கம, ஹிம்பிலியாகட பகுதியில் காட்டு யானை தாக்கி 53 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அருகில் உள்ள வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற அவர், வீடு திரும்பாத நிலையில் பிரதேசவாசிகள் மற்றும் வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின்போதே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.