கொழும்பு வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் சிக்கினார்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக்குகளை உள்ளடக்கிய சீன அரசால் உருவாக்கப்பட்ட புதிய அடுக்குமாடி கட்டடத்தில் பல்வேறு உபகரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் தனியார் துப்புரவு நிறுவனம் ஒன்றின் பரிசோதகர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகிய காட்சிகளின் அடிப்படையிலான விசாரணையின்போது உரிய நபரை அடையாளம் காண முடிந்தது என்றும் வைத்தியசாலையின் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.