ஜனாதிபதி ரணில் நாளை ஜேர்மனிக்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை செவ்வாய்க்கிழமை இரவு ஜேர்மனிக்குச் செல்லவுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெர்லின் உலகளாவிய விவாதத்தில் பங்கேற்பதற்காகச் செல்லவுள்ள ஜனாதிபதி, அந்த மாநாட்டில் உரையாற்றவும் உள்ளார்.

தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரச் சவால்களுக்கு உலகளாவிய தீர்வுகளைக் கண்டறிவதற்கான பெர்லின் உலகலாவிய விவாதம் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்க விஜயங்களை முடித்துக் கொண்டு நேற்றுக் காலை இலங்கை வந்தடைந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வுக்கான இறுதிக் கலந்துரையாடலும் நாளை ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.