இரட்டைப் படுகொலை: ஊடகவியலாளர் உட்பட நால்வர் கைது!

அவிசாவளையில் ஓட்டோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர் என்று அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்குத் தகவல் வழங்கியமை, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு ஓட்டோ மூலம் போக்குவரத்து வசதிகளை வழங்கியமை, உதவி செய்தமை போன்ற காரணங்களுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அவர்களில் ஊடகவியலாளர் ஒருவரும் அடங்குகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 21 ஆம் திகதி இரவு, கேகாலை பகுதியில் உள்ள மரண வீடொன்றுக்கு ஓட்டோவில் பயணித்த குழுவினரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.