தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் தீப்பரவல்.

திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01.10.2023) ஞாயிற்றுக்கிழமை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலை ஆறு மணி அளவில் சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் தீப்பற்றியதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தீப்பற்றியமைக்காண காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.