வடக்கு, கிழக்கு சட்டத்தரணிகள் நாளை முல்லையில் போராட்டம்.

முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சட்டத்தரணிகள் இணைந்து நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவே இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து சட்டத்தரணிகள் சங்கங்களின் சட்டத்தரணிகளும் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.