பங்களாதேஷ் அணி அசத்தல்… 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், உட்பட 10 நாடுகளின் அணி பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் தற்போது வரை மூன்று லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

அதன்படி, முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து இங்கிலாந்து அணியை, நியூசிலாந்து அணி வீழ்த்தியது. நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வென்றது.

இதனையடுத்து மூன்றாவது போட்டியானது இன்று (அக்-7ம் தேதி) தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீச்சை செய்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததால், முதலில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் மற்ற வீரர்கள், பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் 37.2 ஓவர்களிலேயே முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 157 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கி விளயாடியது.

அதன்படி, தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக முதலில் களமிறங்கினர். ஒருபுறம் தன்சித் பொறுமையாக விளையாட, மறுபுறம் தாஸ் 5 ரன்களுடன் ரன் அவுட் ஆனார்.

பிறகு களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் நிதானமாக விளையாடி அரைசதம் எட்ட லிட்டன் தாஸ் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். மிராஸ் 73 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெளியேற, நஜ்முல் ஹொசைன் சாண்டோ களமிறங்கி பேட்டை சுழற்றி அரைசதம் அடித்து விளாசினார்.

தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் ஆட்டமிழக்க, சாண்டோ மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காமல் இறுதிவரை விளையாடி அணியை வெற்றி இலக்கை எட்ட வைத்தனர்.

முடிவில், பங்களாதேஷ் அணி 34.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் விதியத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக ஹசன் மிராஸ் 57 ரன்களும், ஹொசைன் சாண்டோ 59* ரன்களும் எடுத்துள்ளனர்.

போட்டியின் சிறந்த வீரராக மெஹிதி ஹசன் மிராஸ் தேர்வு செய்யபட்டுள்ளார். மேலும், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது என்ற நிலையில், இரண்டாவது போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை இடையே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.