பங்காரு அடிகளார் மறைவு.. இன்று ஒரு நாள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் நடை சாத்தல்!

பங்காரு அடிகளார் மறைவையொட்டி, இன்று ஒரு நாள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார். அவருக்கு வயது 82. மேல் மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்து நிலையில், சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் மறைந்த செய்தி அறிந்த அவரது பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கோயில் கருவறையில் உள்ள சக்தி பீடத்தின் அருகில் இன்று மாலை 5.30 மணிக்கு பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இதையொட்டி, காலை 9 மணி முதல் பொதுமக்கள் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி இன்று ஒரு நாள் மட்டும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது. பக்தர்களும் பங்காரு அடிகளாரின் உடலை நேரில் பார்த்து கதறி அழுகின்றனர். ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், பக்தர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.