மட்டக்களப்பில் ‘லியோ’ படம் பார்க்கச் சென்ற இளைஞர் குழு மோதல்! – வாள்வெட்டில் ஐவர் படுகாயம்.

மட்டக்களப்பு – செங்கலடி திரையரங்கில் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விஜய் நடித்து வெளியான லியோ படம் பார்க்கச் சென்ற இளைஞர்களுக்கிடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு குழுக்களுக்கிடையில் நேற்று ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி அது வாள்வெட்டில் முடிந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் 5 இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.