அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உறுதி – தனியார் துறையினருக்கும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை.

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் (30) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அத்துடன், தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பைக் கோரி நாடு முழுவதும் அரச ஊழியர்கள் நேற்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.