டென்மார்க் தீ விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பலி ..!

டென்மார்க்கில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

செம்பியன்பற்று தெற்கைச் சேர்ந்த ஆறுமுகசாமி காண்டீபன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

மரணித்தவர் டென்மார்க் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் எரிவாயு தீப்பற்றி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(02) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிய வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.