மக்களை அரசு முடக்க இடமளியோம்! – சுமந்திரன் திட்டவட்டம்.

“மக்கள் ஆணை இல்லாத அரசு மக்களை முடக்கும் வகையிலான சட்டங்களை உருவாக்க முயற்சி செய்கின்றது.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.

போராட்டங்கள் ஊடாக அந்த முயற்சியை முறியடிப்போம் என்றும் அவர் சூளுரைத்தார்.

‘வேண்டாம் வாயை மூடும் சட்டங்கள்’ என்ற மக்கள் கருத்தரங்கு நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றபோதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.