ஒட்டுசுட்டான் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமளங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலே மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நெடுங்கேணியில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனமும், ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து நெடுங்கேணி நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதன்போது ஒலுமடு, நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பழனியாண்டி தியாகராசா என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பாக ஹயஸ் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.