கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதியதில் 17 பேர் காயமடைந்தனர்.

மாபலகமவில் இருந்து மத்துகம ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதியதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை கலசேன பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து காரணமாக களுத்துறை மத்துகம வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.