மத்திய தபால் நிலைய ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு.

நுவரெலியா மற்றும் கண்டியில் உள்ள வரலாற்று பெறுமதி வாய்ந்த தபால் நிலைய கட்டடங்களை தனியாருக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் திணைக்கள ஊழியர்கள் அனைவரும் இன்று (7) நள்ளிரவு முதல் 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சம்பத் லியனகே தெரிவித்துள்ளார்.

மத்திய தபால் நிலைய ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று (07) மாலை 4 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது.

மேலும், தபால் ஊழியர்களின் ஏற்பாட்டில் 9-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Leave A Reply

Your email address will not be published.