காதலியைக் கழுத்தறுத்து கொலை செய்த காதலன்! – தென்னிலங்கையில் பயங்கரம்.

ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை 22 வயதுடைய யுவதி ஒருவர் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையைச் செய்தார் எனச் சந்தேகிக்கப்படும் நபர் பிரதேசத்தை விட்டு ஓடிச் சென்று களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் தான் சுகயீனமடைந்திருப்பதாகக் கூறி அனுமதிக்கப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தெஹிவளை, எண்டர்ன் வீதி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய அச்சினி துஷாரி என்ற யுவதியே இன்று காலை ஹோமாகம நீதிமன்ற வீதியில் வைத்துக் கழுத்தறுத்துப் படுகொலை செய்ய்பட்டுள்ளார்.

யுவதியின் காதலனே இந்தக் கொலையைப் புரிந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று காலை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவரது சட்டைப் பையில் இரத்தக் கறை காணப்பட்டுள்ளது.

களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவின் பணிப்புரைக்கமைய மேலதிக விசாரணைகளின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்பில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.