தில்லியில் பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் விபத்து: ஒருவர் பலி

தில்லியில் ரோஹினிப் பகுதியில், பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பேருந்துக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார், மேலும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இந்த விபத்து கடந்த நவம்பர் 4-ஆம் தேதியன்று நடைபெற்றது. விபத்துக்குள்ளான தில்லி போக்குவரத்துக் கழகத்தின் மின்சாரப் பேருந்தின் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தில் சாலையைக் கடக்க முயன்ற ஒருவர் பலியானார். பன்னிரண்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு கார் மற்றும் ஒரு மின்சார ரிக் ஷா ஆகியவை சேதமடைந்தன. ஒருவர் காயமடைந்தார்.

இதைத் தொடர்ந்து பேருந்துக்குள் இருந்த சிசிடிவி கேமராவைப் பரிசோதித்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து நடந்திருப்பதை உறுதிப்படுத்தினர். மேலும் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பேருந்தை நடத்துநர் நிறுத்த முயற்சி செய்வதும் பதிவாகியிருந்தது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.