போருக்குப் பின் இஸ்ரேல் படைகளின் கட்டுப்பாட்டில் காஸா?

இஸ்ரேல் போர் முடிந்த பின்னர் காசா பகுதி ஹமாஸ் போராளிகளிடமிருந்து விடுவிக்கப்படும் என்றும், காசா பகுதியின் பாதுகாப்பை இஸ்ரேலிய இராணுவம் கட்டுப்படுத்தும் என்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்திய செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தனது நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பிற்காக சர்வதேச சக்தியை சார்ந்திருக்க தாம் தயாரில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலுக்கு காசா முனையைக் கட்டுப்படுத்தவோ அல்லது இருக்கவோ விருப்பம் இல்லை, ஆனால் காசா முனையின் பாதுகாப்பை ஒரு சர்வதேச இராணுவத்திடம் ஒப்படைப்பதற்கான நம்பிக்கை இல்லை.

Leave A Reply

Your email address will not be published.