திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பகுதியில் சிறிய நிலநடுக்கம்.

திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பகுதியில் இன்று பிற்பகல் 01.15 மணியளவில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ் தெரிவிக்கையில், மண் அகழ்வு அளவுகோல் 3.4 ஆக காணப்படுவதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என உதவி பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கோமரங்கடவல, ஹொரவ்பத்தனை மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.