மண் சரிவில் சிக்கி காணாமல்போன நால்வரில் இருவர் சடலங்களாக மீட்பு.

பலாங்கொடையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்குண்டு காணாமல்போயிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரில் உயிரிழந்த நிலையில் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பலாங்கொடை– கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மண்சரிவு ஏற்பட்டது.

இந்த மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் புதையுண்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதையுண்டவர்களைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தநிலையில், இரண்டு தினங்களின் பின்னர் இன்று இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து மண்ணில் புதையுண்டு காணாமல்போன ஏனைய இருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.