விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மூவர் கைது.

வவுனியா நகரில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 3 பெண்களை வவுனியா பொலிஸார் நேற்று (18) கைது செய்துள்ளனர்.

வவுனியா நகரில் விபச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், வவுனியா பொலிசார் அவர்களை கைது செய்ய வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் ஒருவர் எழுத்துமூலமும் முறையிட்டிருந்தார்.

நேற்று பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 3 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.