கணவனைத் தாக்கிப் படுகொலை செய்த மனைவி!

குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரை மனைவி கிரிக்கெட் மட்டையால் தாக்கிக் கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் திஸ்ஸமஹாராம பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது, மனைவி தனது கணவரைக் கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் தலையில் படுகாயமடைந்த கணவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

47 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய 42 வயதுடைய உயிரிழந்தவரின் மனைவி திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.