பற்றைக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு! – யாழில் பரபரப்பு.

யாழ்ப்பாணம், பொன்னாலை சந்திக்குச் சமீபமாக வரதராஜப் பெருமாள் ஆலயத்துக்குச் செல்லும் வீதியில் உள்ள பற்றைக்குள் இருந்து நடுத்தர வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்து சில நாள்கள் கடந்திருக்கலாம் எனக் கருதப்படும் அந்தச் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்துப் பொலிஸார் நீதிவானின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.