விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

விசிக குமரிமாவட்ட செயலாளர்.திருமா வேந்தன் தலைமையில் தமிழகத்தில் நீட் தேர்வை தடை செய்யவேண்டும்,பிரதமர் கிசான் திட்டத்தில் ஊழல் அதிகாரிகளை கைது செய்து அவர்களது வங்கி கணக்கில் முறைகேடாக பணம் பெற்றவர்களின் பணத்தை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.உடனே போலீசார் தடுத்து கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.