யாழ். தடுப்பு காவலில் உயிரிழந்த இளைஞர் தொடர்பில் 04 பொலிஸார் கைது!

யாழ்ப்பாணம் சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வட்டுக்கோட்டை, சித்தன்கேணியை சேர்ந்த 26 வயதுடைய நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். வட்டுக்கோட்டை வீடொன்றிற்குள் புகுந்து வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி தொண்ணூறு ஆயிரம் ரூபா மற்றும் 16.5 பவுண் தங்கம் என்பவற்றைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் இறந்த கைது செய்யப்பட்ட சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் கைதாகி இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

இறந்த சந்தேகநபர் நாகராசா அலெக்ஸ் , கடந்த 11ஆம் திகதி வட்டுக்கோடு பொலிஸாரினால் முதலில் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.