மாவீரர்களை நினைவேந்தத் துயிலும் இல்லங்கள் தயார்! – தரணியெங்கும் தமிழர்கள் உணர்வெழுச்சி.

மாவீரர்களை இன்று மாலை உணர்வுபூர்வமாக நினைவேந்தத் துயிலும் இல்லங்கள் தயார் நிலையில் உள்ளன.

தமிழீழத் தனியரசு அமைப்பதற்காக – தனிநாட்டுக்காக இறுதி மூச்சு வரை போராடி – களமாடி வீரச்சாவைத் தழுவிய வீரமறவர்களை – தவப் புதல்வர்களை – காவல் தெய்வங்களைத் தரணியெங்கும் வாழும் தமிழர்கள் உணர்வுடன் பூசிக்கும் மாவீரர் நாள் இன்றாகும்.

மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மக்கள் உணர்வெழுச்சியுடன் தயார் நிலையில் உள்ளனர்.

மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள் மற்றும் விசேட இடங்களில் மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று மாலை 6:05 இற்கு நினைவொலி எழுப்பப்படும். 6:06 இற்கு அகவணக்கம் செலுத்தப்படும். 6.07 இற்கு ஈகச்சுடர் ஏற்றப்படும்.

Leave A Reply

Your email address will not be published.