சம்பூரில் முதலை கடித்து இளம் குடும்பஸ்தர் மரணம்!

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள தொடுவான் குளத்தில் குளிப்பதற்குச் சென்ற இளம் குடும்பஸ்தரைத் தண்ணீருக்குள் முதலை இழுத்துச் சென்று கடித்துள்ள நிலையில் அந்த நபர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயல் ஒன்றைப் பார்வையிட்டு வரும் கணவனும் மனைவியும் (29) பகல் குளிப்பதற்காகக் குளத்துக்குச் சென்றபோது கணவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது என்று விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

தோப்பூர் – பாட்டாளிபுரத்தில் வசித்து வரும் கதிர்காமத்தம்பி நிதுர்ஷன் (வயது 20) எனும் இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பல மணி நேரம் குளத்தில் தேடுதல் மேற்கொண்ட பின்னர் சடலம் மாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.