வீதியைக் கடக்க முற்பட்ட பெண் காரில் மோதி மரணம்!

வீதியைக் கடக்க முற்பட்ட பெண் ஒருவர் காருடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து காலி – கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொடை, மாதம்பகம – வேனமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வேனமுல்ல பிரதேசத்தில் தேங்காய் எண்ணெய் ஆலை ஒன்றை நடத்தி வந்த 50 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.