கல்முனை சிறுவர் இல்லமொன்றில் 17 வயது சிறுவன் அடித்துக் கொலை!

கல்முனை பிரதேசத்தில் சிறுவர் இல்லமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 வயதுடைய சிறுவன் பராமரிப்பாளரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளான்.

சந்தேகத்தின் பேரில் 28 வயதான பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் இந்தச் சிறுவன் தடுத்து வைக்கப்பட்டிருந்தான்.

சிறுவனின் பிடிவாதத்தை அடக்குவதற்காக கட்டைகளால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.