போலந்து பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது!

ஹப்புத்தளையில் உள்ள விகாரை ஒன்றில் போலந்து பெண் ஒருவரை வன்புணர்வு செய்ய முயன்றதாக சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹப்புத்தளை – வெலிமடை வீதியிலுள்ள விகாரை ஒன்றிற்கு சென்ற தாம் அங்குள்ள பிக்குவினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேக நபரை இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.