நீர்க் கட்டணத்துக்கு விரைவில் வருகின்றது விலைச்சூத்திரம்.

நீர்க் கட்டணத்துக்கு விலைச்சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இது தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

நீர்க் கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க முடியாது எனவும், நீரைப் பெற்றுக்கொள்வதற்கு மின்சாரம் தேவைப்படுகின்றது எனவும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சுட்டிக்காட்டினார்.

அதற்காக விலைச்சூத்திரம் ஒன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.