யாழில் மாவா போதைப் பாக்குடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு சந்தேகநபர் போதைப் பாக்கு விற்பனையில் ஈடுபட்டபோது யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு யாழ். பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், பெருமாள் கோயிலடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றின் அருகிலேயே 33 வயதான மேற்படி சந்தேகநபர் மாவா போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 3 கிலோ 686 கிராம் நிறை கொண்ட மாவா போதைப்பொருள் சிறிய சிறிய பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் விசாரணைகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.