யாழ். பல்கலை மாணவர் பிரதிநிதியை நான்கரை மணிநேரம் விசாரணை செய்த ரி.ஐ.டி.!
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2023/12/Screenshot_20231211_162727_Facebook.jpg)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரும் ஊடகவியலாளருமான இராசரத்தினம் தர்ஷனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இன்று (11) விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தர்ஷனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து சுமார் 4 மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணை இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 2.30 மணி வரை தொடர்ச்சியாக இடம்பெற்றது.
கடந்த 2022ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்தபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் இசைக்கப்பட்டமை மற்றும் மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகள், மாணவர் ஒன்றியம் நடத்திய ஊடக சந்திப்புகள் தொடர்பிலேயே தர்ஷனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.