யாழில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்., மானிப்பாய் வீதியைச் சேர்ந்த சிவபாதம் சிவசுதன் (வயது 40) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், தனது வீட்டில் (18) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார். இதைக் கண்ட உறவினர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.