தந்தை இறந்து 3 நாள்களின் பின்னர் தாய், மகன், மகள் சடலங்களாக மீட்பு!

கொழும்பின் புறநகர் பகுதியான மாலம்பே – கஹந்தோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் இன்று அதிகாலை வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. தாய் (வயது – 35), மகன் (வயது – 10) மற்றும் மகள் (வயது – 9) ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

தந்தை கடந்த 28 ஆம் திகதி நஞ்சு அருந்தி உயிர் மாய்த்துள்ளார். இறுதிக்கிரியைகள் நேற்று நடைபெற்றன.

இந்தநிலையில், தந்தையின் உயிரிழப்பால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தாயும், இரண்டு பிள்ளைகளும் நஞ்சு அருந்தி தாங்களும் உயிரை மாய்த்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மூவரினதும் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.