யாழில் வீடொன்று மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்! – மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறியாட்டம்.

யாழ்ப்பாணம் – புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்று மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிள் வந்த இனந்தெரியாதோர் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் வீட்டின் முன் பகுதி சேதம் அடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.