வவுனியாவில் எலிக்காய்ச்சலால் இளைஞர் ஒருவர் பரிதாப மரணம்.

வவுனியாவில் எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கு சில தினங்களாகக் காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இதன்பின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் மேற்படி இளைஞர் எலிக்காய்ச்சல் காரணமாக மரணமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செட்டிகுளம், முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் என்ற 22 வயது இளைஞரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

Leave A Reply

Your email address will not be published.