பருத்தித்துறையில் ஐஸ் போதைக்கு அடிமையான பெண் விளக்கமறியலில்

ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பகுதியில் இரவு வேளை சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய மேற்படி பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸார், அந்தப் பெண்ணை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை அவர் போதைக்கு அடிமையானவர் எனக் கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அப்பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அவர் தாய், தந்தை இல்லாத நிலையில், பேத்தியாருடன் தங்கியே வாழ்ந்து வருகின்றார் எனவும், அண்மைக்காலமாக ஐஸ் போதைக்கு அடிமையாகி உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் அந்தப் பெண்ணை முற்படுத்திய வேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.