தேர்தலை நடத்தக் கோரி எம்.பி. பதவியைத் துறந்து சமிந்த விஜேசிறி அதிரடி.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர், எம்.பி. பதவியைத் துறப்பதாக அறிவித்தார்.

பதவி விலகல் கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

“மக்கள் கோரும் நாடாளுமன்றம் அமைய தேர்தல் நடத்தப்பட வேண்டும். கட்சியுடன் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஒரு தந்தை போலவே கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ என்னை வழி நடத்தினார்” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஐக்கிய மக்கள் சக்திதான் எனது கட்சி. சஜித்தான் நாட்டைச் சிறப்பாக நிர்வகிக்கக் கூடியவர். மக்கள் விரும்பினால் மீண்டும் அரசியலுக்கு வருவேன்” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.